மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பொதுவாக கேரக்டர்களுக்காக நடிகர்கள் எடை குறைப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் அதிகம் மெனக்கெட்டவர் விக்ரம். ஐ படத்திற்காக அவர் 25 கிலோ எடை குறைத்தார். இப்போது அவரையும் தாண்டி வீரசாவர்கர் கேரக்டரில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா 26 கிலோ எடை குறைத்துள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீர சாவர்கரின் வாழ்க்கை 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, சாவர்கராக நடிக்கிறார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் பண்டிட் கூறியிருப்பதாவது: வீரசாவர்கர் கேரக்டருக்காக ரன்தீப் ஹூடா எல்லா வகையான கடின முயற்சிகளையும் மேற்கொண்டார். கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் மூழ்கியிருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை நான்கு மாத காலம் ஒரே ஒரு பேரிச்சம்பழமும், ஒரு கிளாஸ் பாலும் மட்டுமே உட்கொண்டு வந்தார். இதன் மூலம் 26 கிலோ எடையை குறைத்தார். சாவர்கரின் தோற்றம் வரவேண்டும் என்பதற்காக பாதி தலைக்கு மொட்டையடித்தார். அவரது உழைப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பலன்கள் அவருக்கு நிச்சயமாக கிடைக்கும் என்றார்.