'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மீண்டும் கங்குலியின் பயோபிக் படத்தை தூசி தட்டி பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிப்பதாகவும், ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கங்குலியாக நடிக்க விக்கி டோனர், ஆர்டிகள் 15, பதாய் ஹோ போன்ற படங்களில் நடித்த ஆயுஷ்மான் குராணா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி கிரிக்கெட்டில் அவர் சாதித்தது, பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.