நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மீண்டும் கங்குலியின் பயோபிக் படத்தை தூசி தட்டி பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிப்பதாகவும், ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கங்குலியாக நடிக்க விக்கி டோனர், ஆர்டிகள் 15, பதாய் ஹோ போன்ற படங்களில் நடித்த ஆயுஷ்மான் குராணா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி கிரிக்கெட்டில் அவர் சாதித்தது, பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.