22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அன்போடு தாதா என்று அழைப்பார்கள். 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தலைதூக்கிய பிறகு கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக்க இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், இப்போது கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் கங்குலியை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது என கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் கங்குலியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.