'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அவருடன் நடிப்பதற்காக அந்த நாட்டு நடிகர், நடிகைகளும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடன இயக்குனர் பரா கான், ஷாருக்கானை வைத்து இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்கிற படத்தில் ஷாருக்கானின் தந்தையாக நடித்தவர் பாகிஸ்தான் நடிகர் ஜாவேத் ஷேக்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சம்பளம் பேசப்பட்டபோது தனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ஜாவேத் ஷேக், ‛‛தான் அப்படி கூறினாலும் அவர்களாகவே ஒரு தொகையை எனது சம்பளமாக நிர்ணயித்து, அதில் எனக்கு முதல் கட்டமாக ஒரு காசோலை கொடுத்தார்கள். அந்தத்தொகையைப் பார்த்தே நான் பிரமித்துப் போனேன்” என்று கூறியுள்ளார்.




