ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1930ல் பிறந்த அவர் தனது 25வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மறைந்த சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில், ‛‛சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சுலோச்சனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.




