ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1930ல் பிறந்த அவர் தனது 25வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மறைந்த சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில், ‛‛சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சுலோச்சனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.