இந்தவாரம் வரிசை கட்டும் படங்கள் : பிப்., 14ல் இவ்வளவு படங்கள் ரிலீஸா...! | ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..: தனுஷின் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' டிரைலர் வெளியீடு | பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா |
பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1930ல் பிறந்த அவர் தனது 25வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மறைந்த சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில், ‛‛சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சுலோச்சனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.