விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1930ல் பிறந்த அவர் தனது 25வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மறைந்த சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில், ‛‛சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சுலோச்சனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.