பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் முக்கியமானவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்ததால் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். ஆங்கிலேயர்களின் தலைநகரான லண்டனிலேயே அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர். இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கும் இந்து மகாசபையை உருவாக்கியவர். பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், வீரர்களுக்கும் ரோல்மாடலாக இருந்தவர்.
அவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரிக்கப்பட இருக்கிறது. அவரது 138வது பிறந்த நாளான நேற்று இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை மகேஷ் மஞ்சரேகர் இயக்குகிறார். ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாகி இருப்பது குறிப்பிடத்தக்து.