பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.