திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
கடந்த 2020ல் கொரோனா முதல் அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கியவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ ஆரம்பித்து விட்டனர். இன்னும் சில ஒரு படி மேலே சென்று அவருக்காக மிகப்பெரிய சிலைகள் அமைப்பதும் அடுத்த கட்டமாக சில இடங்களில் அவருக்காக கோவில் கட்டவும் கூட ஆரம்பித்தனர்.
அப்படி தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேடில் அவருக்காக ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்தார் சோனு சூட். அதேசமயம், "எனக்கு இதில் உடன்பாடு சிறிதும் இல்லை.. நான் அந்த அளவுக்கு தகுதியானவனும் இல்லை. மக்களை சந்திப்பதற்காக தான் இப்போது கூட நான் வந்தேன். அதேசமயம் என் மீது மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடுதான், இது போன்று சிலைகளாகவும் கோவிலாகவும் அவர்கள் வெளிக்காட்டுகின்றனர் என் மீது அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கோவிலுக்கு பதிலாக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நானும் அதுகுறித்து பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார் சோனு சூட்.