இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபீராகம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பதான்'. இப்படம் வசூலில் புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி இதுவரையில் 953 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்திய அளவில் 593 கோடியும், வெளிநாடுகளில் 360 கோடியும் வசூலித்துள்ளது. 1000 கோடி வசூலைத் தொட இன்னும் 47 கோடிதான் தேவை. இந்த வார இறுதிக்குள் அந்த சாதனையையும் இந்தப் படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வசூலைக் கடக்கும் போது இப்படம் அதிக வசூலைப் பெற்ற இரண்டாது ஹிந்திப் படம் என்ற சாதனையைப் படைக்கும். இரண்டாவது இந்தியப் படம் என்ற சாதனையைப் படைக்க 'கேஜிஎப் 2' படத்தின் 1200 கோடி, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 1200 கோடி வசூலை முறியடிக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.