அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, தேசப்பற்று மிக்க நடிகையும்கூட. அடிக்கடி அவர் கூறும் சமூக மற்றும் அரசியல் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய சக்தியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி, கங்கனாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முன்வந்தபோது அதனை கங்கனா மறுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் மூலம் பார்லிமென்ட் செல்லவே விரும்புவதாக கூறுகிறார்கள்.