பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் நாயகன் ரன்வீர்சிங். சமீபத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல்மூலம் ஆபாசத்தை பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் சிங் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரன்வீர் சிங்கிற்கு செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து ரன்வீர் சிங் தனது வழக்கறிஞருடன் போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ரகசிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும், எப்ஐஆரும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட் வழிகாட்டுதல்படி தேவைப்பட்டால் ரன்வீர் சிங் கைது செய்யப்படலாம். முதல்கட்ட விசாரணை முடிந்தாலும் தேவைப்டும் பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.