எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த மகளுக்கு துவா என்று பெயர் வைத்தார்கள். இப்போது வரை தங்களது மகளின் முகத்தை அவர்கள் ரசிகர்களுக்கு காட்டவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கள் மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கொண்டாடி உள்ளார்கள். மகளின் இந்த பிறந்த நாளுக்காக தானே கேக் தயாரித்துள்ளார் தீபிகா படுகோனே. அதையடுத்து மகளுக்கு தாங்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்ந்து தெரிவித்து கொள்கிறார்கள். என்றாலும் இந்த பிறந்தநாளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் அவர்கள் தங்களது மகளின் முகத்தை காட்டவில்லை.