ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராஜஸ்தான் அரசியலை கலக்கிய பன்வாரி தேவி கதையில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு மர்ம ஆசாமிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த படத்தின் டைரக்டருக்கும் இதேபோன்று மிரட்டல்கள் வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி (36). நர்சாக பணிபுரிந்த இவருக்கு அம்மாநில மந்திரியாக இருந்த மகிபால் மாதர்னா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. மகிபால் மாதர்னா மற்றும் சிலருடன் பன்வாரி தேவி உல்லாசமாக இருந்த சி.டி. வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் ஜோத்பூரில் இருந்து திடீரென காணாமல் போன பன்வாரி தேவி, கடந்த 2011–ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற பெயரில் இந்திப்படம் எடுக்கப்படுகிறது. டைரக்டர் கே.சி.பொக்காடியா இயக்கி வரும் இப்படத்தில், நடிகை மல்லிகா ஷெராவத் கதாநாயகியாக நடிக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மல்லிகா ஷெராவத்துக்கும், டைரக்டர் கே.சி.பொக்காடியாவுக்கும் போனில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதுபற்றி மல்லிகா ஷெராவத் அளித்துள்ள பேட்டியில், ‘என்னுடைய சகோதரருக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், பன்வாரி தேவி கதையை வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிப்பதில் இருந்து உன்னுடைய சகோதரியை விலகுமாறு சொல் என்று மிரட்டி இருக்கிறார். எனக்கும் இதே மாதிரியான மிரட்டல்கள் வந்துள்ளது, என்று கூறியுள்ளார்.