வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா |
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் பற்றி ஆலியா பட்டிடம் கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த ஆலியா "என் கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்பாக இருப்பது என்பது குறித்து எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல தோழிகள். எனக்கு அந்த இருவரையும் மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட கரன் ஜோஹரும் பதில் சொன்ன ஆலியா பட்டும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகளின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் என்பது அனைவருக்கும் தெரியும்.