இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். அவர் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் நான்கு மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை 119 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுக்கு மாடி குடியிருப்பில் 16, 17, 18, 19 ஆகிய தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாம். மொத்தம் 11,266 சதுர அடி வீடு. மாடிப் பகுதி மட்டும் 1300 அடி. 19 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது. அதற்காக பத்திரப் பதிவுக் கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாயாம்.
ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரது வீட்டிற்கருகில்தான் ரன்வீர் சிங் வாங்கியுள்ள 'சாகர் ரேஷம்' என்ற இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறதாம். தங்களது ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் ரன்வீர் சிங்கும், அவரது அப்பாவும் இந்த குடியிருப்பை புக் செய்துள்ளார்களாம்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ள ரன்வீர் சிங் தற்போது 'சர்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படங்களில் நடித்து வருகிறார்.