எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் கபி ஈத் கபி தீவாளி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பிளாட்பார கார் விபத்து, மான் வேட்டை என சர்ச்சைகளில் சிக்கினாலும், இன்னொருபக்கம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களிலும் தனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் மரம் நடுதலின் அவசியம் குறித்து தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தும் விதமாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மரக்கன்றுகளை நட்டு தனது ரசிகர்களும் இதேபோன்ற மரம் நடும் பணியில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சல்மான்கான். பிரபலங்களை வைத்து இப்படி மரம் நடுதலின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.
மரம் நடுதலின் அவசியம் பற்றி சல்மான்கான் கூறும்போது, “சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னுடைய ரசிகர்களுக்கு இந்த மரம் நடும் சவாலை நான் விடுகிறேன். பூமி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மனிதரும் மரம் நடவேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சி குறிப்பிட்ட உயரம் வந்து நின்றவுடன், அவர்கள் கட்டாயம் மரங்களை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். மரம் என்பது நிலைத்து நிற்கும் மனிதனாகவும் மனிதன் என்பவன் நடமாடும் மரமாகவும் இருக்க வேண்டும். இந்த பந்தம் ரொம்பவே முக்கியமானது” என்று தத்துவார்த்தமாக கூறியுள்ளார் சல்மான்கான்.