நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாபோல உங்களையும் கொல்வோம் என்று சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு நேரடி கொலை மிரட்டல் வந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், மும்பை பாந்த்ரா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூங்காவில் தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவருடன் அவரது பாதுகாவலரும் உடன் செல்வார். நடைபயிற்சி முடிந்து வழக்கமாக ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுப்பது வழக்கம்.
நேற்று அந்த இடத்தில் அழகான கடிதம் ஒன்று கிடந்தது. அதனை அவரது உதவியாளர் எடுத்து படித்தார். அந்த கடிதத்தில் 'சலீம் கான், சல்மான் கான்... விரைவில் சித்து மூஸ்வாலா போல்...' என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சலீம் கானிடம் அந்த கடித்தத்தை கொடுத்தார். அவர் மும்பை போலீசிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாந்த்ராவில் சல்மான்கான் குடியிருக்கும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.