ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த பிசினஸ்மேன் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் மகேஷ்பாபு கூறியிருப்பதாவது: எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட ஹிந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன்.
தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. ஹிந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் ஹிந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். என்கிறார்.
இதேபோல தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. பொதுவாக எனக்கு மாநில மொழி படங்களில் நடிக்கும் எண்ணமில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களில் பணத்துக்காக பிராந்திய மொழி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம் நான் ஹிந்தி நடிகன். என்று கூறியிருக்கிறார்.