எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த பிசினஸ்மேன் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் மகேஷ்பாபு கூறியிருப்பதாவது: எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட ஹிந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன்.
தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. ஹிந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் ஹிந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். என்கிறார்.
இதேபோல தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜான் ஆபிரஹாம் கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. பொதுவாக எனக்கு மாநில மொழி படங்களில் நடிக்கும் எண்ணமில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களில் பணத்துக்காக பிராந்திய மொழி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம் நான் ஹிந்தி நடிகன். என்று கூறியிருக்கிறார்.