துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களின் தலைவர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தவர் பாலிவுட் நடிகர் மகரந்த தேஷ்பாண்டே. சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படம் வெளியான பிறகு படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் சில நொடிகள் மட்டுமே வந்து சென்றது குறித்து மீடியாவில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் மேலும் இரண்டு காட்சிகளில் நடித்திருப்பதாகவும் ஆனால் படத்தின் நீளம் கருதி அவை வெட்டப்பட்டு விட்டதாகவும் கூறிய அவர் ராஜமவுலியின் இயக்கத்தில் ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வந்து சென்றால் கூட தனக்கு பெருமை தான் என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் இவரை நடிக்க வைப்பதற்காக இயக்குனர் ராஜமவுலி இவரை மும்பையிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். அந்த சமயம் முடியை நன்றாக ஒட்ட வெட்டி இருந்த மகரந்த தேஷ்பாண்டேவை பார்த்த ராஜமௌலி அதிர்ச்சியானாராம். ஆனால் மகரந்த தேஷ்பாண்டேவோ, தான் செல்லும் போது கூடவே கையுடன் ஒரு விக்கையும் எடுத்துச் சென்றிருந்தார். ராஜமவுலியின் அலுவலகத்தில் இருந்த ஒப்பனை கலைஞரின் உதவியுடன் அந்த வைகை அணிந்து காட்ட அதன்பிறகு தான் ராஜமவுலிக்கு திருப்தி ஏற்பட்டது என்று கூறியுள்ளார் மகரந்த தேஷ்பாண்டே.