மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவருக்கு மர்மநபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பூஜாபட் கூறும் போது என் செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாக என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டி தீர்த்த பிறகு போனை துண்டித்து விட்டான். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசில் புகார் செய்தேன் என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25வயதுடைய வாலிபர் என்றும், அவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனை பூஜா பட்டும் உறுதி செய்துள்ளார்.