ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. ஜனவரியில் வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திரபிரசாத்தே கதை எழுதி வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆர்ஆர்ஆர் படம் வெளியானதும் சிறிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூரை வைத்து ஒரு ஹிந்தி படத்தை ராஜமவுலி இயக்கப்போவதாகவும், அந்த படத்தை சில மாதங்களிலேயே இயக்கி முடித்த பிறகு மகேஷ்பாபு படவேலைகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராஜமவுலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.