குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாரூக்கான். அந்த வகையில் ஆரியன்கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஜாமீன் மனுவை நிராகரிக்க கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதியான இன்று ஆரியன் கானின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரியன்கான் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்படி பலமுறை ஆரியன்கானை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தும் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காததால் ஷாரூக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.