கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாரூக்கான். அந்த வகையில் ஆரியன்கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஜாமீன் மனுவை நிராகரிக்க கூறப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 20ம் தேதியான இன்று ஆரியன் கானின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரியன்கான் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்படி பலமுறை ஆரியன்கானை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தும் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காததால் ஷாரூக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.