ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பிரபல பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி. ஓம் சாந்தி ஓம், எனிமி, தி பவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு யுவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது. என்று தெரிவித்தார்.
என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹன்சி போலீசார் நேற்று யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மாலையில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.