‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பல்வேறு வழக்குகளில் சிக்கி இப்போது சிறையில் இருக்கும் பூனைக்கண் நடிகை. கடும் கோபத்தில் இருக்கிறாராம். தான் சார்ந்திருக்கும் சினிமா உலகம், தான் சார்ந்திருக்கும் கட்சி, ஜாதி அமைப்பு எதுவும் தன்னை காப்பாற்ற முன்வராத கோபத்தில் இருக்கிறார். காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை. இதனால் சிறையிலிருந்து வெளியே வந்ததும். தன்னை பயன்படுத்திக் கொண்ட அத்தனை பேரின் முகத்திரையையும் கிழிக்கப்போகிறேன் என்று சவால் விட்டிருக்கிறாராம். பூனைக் கண் நடிகை தன்னைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க எவ்வளவு வேண்டும் என்று சில பிரமுகங்கள் பேரம் பேசி வருகிறார்களாம். இப்படி வரும் தொகையைக் கொண்டு கடன்களை அடைத்து விட்டு வழக்கிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாம். இந்த திட்டம் வெற்றிபெறாவிட்டால் கடைசி வரை போராடிப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.