‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பதினாறு வயதை தொட்டதுமே சினிமா கோதாவில் இறங்கிவிட்டார் பூர்ணா. கேரளத்து பெண்குட்டியான இவர் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகை. ஆனால் நடித்த படங்கள் வரிசையாக ஊத்திக்கொண்டதால், கோடம்பாக்கம் அம்மணியை ஏறக்கட்டி விட்டது. அதனால் பிழைப்பு தேடி ஆந்திராவில் ஒதுங்கிய நடிகைக்கு அங்கு நல்ல ஏறுமுகமாகவே மார்க்கெட் இருந்தது. அதோடு, தமிழில் போர்த்திக்கொண்டு நடித்த பூர்ணா, அங்கு சென்றதும் போர்த்தியிருநத போர்வையை காற்றில் பறக்க விட்டதால் படக்கூலியும் எகிறியது.
இந்த சமயத்தில் களவாணி நாயகன் நடிக்கிற ஒரு படத்துக்காக தமிழுக்கு வந்திருக்கிறார் நடிகை. ஆனால் இதே படத்தில் தான் கடைசியாக தமிழில் கதாநாயகியாக நடித்து விட்டு சென்ற ஒரு ஐந்தெழுத்து படத்தின் நாயகனும் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துளளார் பூர்ணா. காரணம், அந்த படத்தில் நடித்தபோது அந்த அப்பா வயது நடிகர், அடிக்கடி நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடந்தால் நடிகை மக்கர் பண்ணுவார் என்பதற்காக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி மேற்படி நடிகை மீது வில்லன் தோரணையில் சீறி பாய்ந்திருக்கிறார் அந்த நடிகர். இதனால் அப்போதிலிருந்தே அந்த நடிகரின் பெயரைக்கேட்டாலே நடிகைக்கு அலர்ஜியாம். அதனால் இப்போது நடிக்கிற படத்திலும் அவர் இருப்பதால் அவரிடமிருந்து தன்னை காத்துக்கொள்வதற்காக தனது தாய்குலத்தை எப்போதும் நிழல் போலவே தன்னை தொடர்ந்து வருமாறு உத்தரவு போட்டிருக்கிறார். இப்படி நடிகையை தாய்குலம் நிழல்போல் தொடர்வதால் நடிகையை அண்ட முடியாமல் ஆத்திரத்தில் கழுகு போன்று வட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் அந்த புதுமையான நடிகர்.