இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்பு கடற்கரையோர கிராமங்களில் நடந்ததால், அந்த கொளுத்தும் வெயிலும், உப்புக்காற்றும் சமந்தாவின் மெல்லியை தோலை பதம் பார்த்துவிட்டன. ஆங்காங்கே அலர்ஜியால் ரத்தம் கட்டிப்போக அலறிவிட்டார் சமந்தா. மருத்துவ பரிசோதனையில், தோல் அலர்ஜி நோய், உடனே சிகிச்சை பெற வேண்டும் என்று கண்டிசனாக சொன்னதால், கடல் மற்றும் ஐ படங்களில் இருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதனால் இரண்டு மாதங்களாக தீவிரமான சிகிச்சை எடுத்து விட்டு இப்போது மீண்டும் சினிமா களத்தில் குதித்திருக்கிறார் சமந்தா. ஆனால் இப்போது அவரை சந்தித்து கதை சொல்லச் செல்கிறவர்கள், கதை சொல்வதைவிட அவரது உடம்பை துருவி துருவி பார்க்கிறார்களாம். பார்க்கக்கூடாத இடத்தைப்பார்த்து விட்டு சமந்தாவை நெளிய வைக்கும் அளவுக்கு கேள்வி கேட்கிறார்களாம். இதனால் இப்போது கதை சொல்ல வேண்டும் என்று இயக்குனர்கள் போன் செய்தால், முடிந்தவரை போனிலேயே கேட்கிறேன் என்கிறாராம் சமந்தா. அதோடு, தனது உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை. என்ற மருத்துவ சான்றிதழையும் அவர்களுக்கு மெயில் பண்ணி விடுகிறாராம் நடிகை.