‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
குஷியை தந்த அந்த சூர்யமான இயக்குனர், தனது பிறந்த நாளையொட்டி கோலிவுட் அபிமானிகளுக்கு உற்சாகமான விருந்து கொடுத்தார். பல இளவட்டங்கள் ஆஜராகி ஆல்ஹகால் வழியாக ஆனந்த உலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்களாம். அப்போது, அவர்களுக்கு சைடீஸ் கொடுக்க அந்த ஹோட்டலைச்சேர்ந்த ஊழியர் ஒருவர் வந்தபோது, அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அங்காடித்தெரு நடிகை, ஊழியரிடம் ஏதோ போதையில் உளறினாராம். அதற்கு அவர் ஏதோ சொன்னாராம்.
விளைவு, கோபத்தில் பாய்ந்து அவரை தாக்கி விட்டாராம் நடிகை. இதையடுத்து குஷியானவரும் நடிகைக்காக வரிந்து கட்டிக்கொண்டு தானும் ஹோட்டல் ஊழயரை போட்டுத்தாக்கி ரகளை செய்து விட்டாராம். இதனால் ஒரே களோபரமாகி விட்டதாம். அதையடுத்து, நிர்வாகத்தினர் புகுந்து கலவரத்தை அடக்கினார்களாம். அதோடு, அங்கு உடைந்து கிடந்த பொருட்களுக்காக ஒரு பெரிய பில்லை இயக்குனரின் பாக்கெட்டில் திணித்து பேரதிர்ச்சி கொடுத்து விட்டதாம் ஹோட்டல் நிர்வாகம்.