‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சூரிய நாயகனின் உறவினராக ரசிகர் மன்றத்தை மட்டுமே பார்த்துக் கொள்வதற்காக வந்தவர், அப்படியே தயாரிப்பாளராக உயர்ந்து அந்த நாயகனின் குடும்பத்தினர் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். இடையில் நாயகனின் குடும்பத்தினருக்கும் அந்த உறவினருக்கும் உரசல் ஏற்பட்டதாகவும் அதனால்தான் நாயகனே தனியாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பின் இரு தரப்பினரும் அமர்ந்து பேசி அவர்களுக்கிடையே இருந்த பிரச்னைகளை தீர்த்துக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது பச்சை நிறுவனம் அடுத்தடுத்து சில பெரிய படங்களின் தமிழ்நாடு வினியோக உரிமையை வாங்கியுள்ளது. அந்தப் படங்கள் அனைத்துமே மிகப் பெரிய படங்கள். அது மட்டுமல்லாது அவர்களது சொந்தத் தயாரிப்புப் படம் ஒன்றும் இருக்கிறது. மேற் சொன்ன படங்கள் அனைத்துமே ஏப்ரல், மே மாதங்களில் வெளிவர உள்ளதால் அந்த நிறுவனம் மட்டுமே தொடர்ச்சியாக திரையரங்குகளை வளைத்துப் போடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாம். இதனால் மற்ற தயாரிப்பாளர்களும், சில தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். திரையுலகில் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்துள்ள நிலையில் ஒரு சிலர் மட்டும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவதாக பாதிக்கப்படுபவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சமீப காலங்களில் படங்களை வெளியிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் பல நல்ல படங்கள் தவித்த கதைகளும் நடந்துள்ளன. இதற்கு முன்னணியில் உள்ள ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களே காரணம் என்றும் தெரிவிக்கிறார்கள். உடனடியாக பெரிய படங்களுக்கென தனியான தேதிகளை ஒதுக்கியும், மற்ற சிறிய தயாரிப்பாளர்களின் படங்களை வெளியிடவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தவித்து வரும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.