போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஆர்யா படு சுதந்திரமாக பழகுவது ஹன்சிகாவுடன் மட்டும்தான். சேட்டை பட ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு போட்ட கடலை கொஞ்சநஞ்சமல்ல என்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் இருந்து விட்டு, இப்போது சேட்டை படம் ஊத்திக்கொண்டதால், இனிமேல் ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா செய்தி வெளியிட்டிருக்கிறார். இதுதான் ஆர்யாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், அவர் நம்பருக்கு அடிக்கடி போன் போட்டு அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறாராம் நடிகர். அவரை சுத்தமாக தவிர்க்க நினைக்கும் ஹன்சிகா, அவரது போன் கால்களையும் அட்டன் பண்ணுவதில்லையாம்.
இதுகுறித்து ஆர்யா புலம்பிக்கொண்டு திரிந்தபோது, இதற்கெல்லாம் ஹன்சிகா காரணமில்லை. அந்த வாலு நடிகர்தான் காரணம் என்று சில கோலிவுட் அம்பிகள் திரித்து விட்டார்களாம். இதனால் தனது நட்பு வட்டார நடிகர்களை திரட்டி, அந்த நடிகர் இப்படி செய்வது நியாயமா? சினிமாவுக்குள் வரும் நடிகைகள் நாம் அனைவருக்கும் பொதுதானே. இதில் இவர் மட்டும் எப்படி தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியும் என்று நியாயம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஆர்யா.