ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பீட்சா நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட அலம்பல் செய்து, கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார், உலக நாயகரின் வாரிசு. இதையடுத்து, எந்த இயக்குனரும் அவரை படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை.
தற்போது, உலக நாயகரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர், உச்ச நடிகரை வைத்து, தான் இயக்கி வரும் புதிய படத்தில், அவரை நடிக்க வைத்திருக்கிறார். இதை வைத்து, விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக, சில இயக்குனர்களை தேடி சென்று, உலக நாயகரின் வாரிசு, வாய்ப்பு கேட்டபோதும், மணிக்கணக்கில் அவருடன் அரட்டை அடிப்பவர்கள், இவர் பட வாய்ப்பு என்றதும் தெறித்து ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.
அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் 'ஹீரோ'களை அம்மணி மதிக்காமல் நடந்து கொண்டதால், ஒட்டுமொத்த கோலிவுட்டே வெறுத்து ஒதுக்கத் துவங்கி விட்டது.