‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஊர் பெயரிலேய படம் எடுத்து பெரிய அரசரானவர் அந்த இயக்குனர். சூப்பர் டூப் ஹிட்டெல்லாம் கொடுத்தவர். திடீரென அவர் பாணி அடிதடி படம் போரடிக்க வாய்ப்புகள் குறைந்தது. வேறு பாணியில் படம் எடுக்கவும் அவருக்குத் தெரியவில்லை. இதனால் புதிய படம் வரவில்லை. இருந்தாலும் அவர் தன் பாணி மீது அதீத நம்பிக்கை வைத்து சின்னத்தளபதியை வைத்து சென்னை பக்கத்தில் உள்ள முருகனின் அறுபடை வீட்டு ஸ்தலத்தின் பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் தாயாரிப்பாளர் பாதியில் விலகிக் கொள்ள பெரிய அரசுவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டார். எப்படியும் போட்ட பணம் வந்துவிடும் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போனது. படம் நாலு நாளைத் தாண்டவில்லை. கோடிக் கணக்கில் நஷ்டம். தற்போது இயக்குனர் கடனை அடைக்க முடியாமலும், புதிய பட வாய்ப்பு இல்லாமலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். யாராவது வாய்ப்புக் கொடுத்து அவரது சம்பளத்தை முன்னதாகவே கொடுத்தால் கூட பாதி கடனைத்தான் அடைக்க முடியுமாம்.