மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏ.ஆர்.ரகுமான் இசையில், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீடு நேற்று துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலையில் விழா நடந்து முடிந்த பின்னும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பாடல்களை தாமதமாகவே வெளியிட்டார்கள். ஆனால், நேற்று இரவே பல்வேறு இணையதளங்களில் பாடல்கள் லீக் ஆகி படக் குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தன.
படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்களை, நா.முத்துக்குமார், மதன் கார்க்கி 2.0 படத்தின் பாடல்களை எழுதியிருந்தாலும் நேற்று மதன் கார்க்கி எழுதிய இரண்டு பாடல்களான எந்திர லோகத்து...., ராஜாளி ஆகிய இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டனர். மறைந்த நா. முத்துக்குமார் எழுதிய பாடலை நேற்று வெளியிட்டிருந்தால் அவருக்கும் அவருடைய புகழுக்கும் ஒரு அஞ்சலி செலுத்தியதாக இருந்திருக்கும்.
எந்திர லோகத்து சுந்தரியே... பாடலை சித் ஸ்ரீராம், ஷாணா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளார்கள். இந்தப் பாடலைக் கேட்பதற்கு எந்திரன் படத்தில் இடம் பெற்ற இரும்பிலே ஒரு இருதயம் பாடலைக் கேட்பது போலவே உள்ளது. அச்சம் என்பது மடமையடா படத்தில் தாமரை எழுதி இடம் பெற்ற ராஜாளி என்ற வார்த்தையை மதன் கார்க்கி இந்தப் பாடலிலும், இரண்டாவது பாடலிலும் பயன்படுத்தியது ஏனோ?.
எந்திர லோகத்து.. பாடலின் ஆரம்பமே உயிரே..உயிரே... என ஆரம்பமாவதே முரணாக உள்ளது. ஆண் ரோபோவும், பெண் ரோபோவும் பாடல் ஆக இது இருக்கலாம். பாடல் ஆரம்பத்தில் பெண் குரல், உயிரில்லாத ஆண் ரோபோவைப் பார்த்து உயிரே உயிரே எனப் பாடுகிறது. அடுத்து ஆண் ரோபோ, ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா என பெண் ரோபோவைப் பார்த்து பாடுவது போல் எழுதப்பட்டுள்ளது. என் கணி மடி, கணினி ரஜினி நீ என ரஜினியின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது அருமை.
“சென்சார், கேபிள், விசைப் பொறி, குறும் பதிவு, கடவுச் சொல், கணி மடி, கணினி,” வழக்கம் போல கணினி சார்ந்த அறிவியல் வார்த்தைகளுடன் விளையாடியிருக்கிறார் மதன் கார்க்கி. சித் ஸ்ரீராம், ஷாஷா குரல்கள் பாடலில் தனித்துத் தெரிகின்றன.
இரண்டாவது பாடல் ராஜாளி நீ காலி. பாடலின் ஆரம்பம் ஐசா கசுமோ பேரன்டா என ஆரம்பமாகிறது. மதன் கார்க்கி விளக்கினால் நலம். இந்தப் பாடலிலும் ராஜாளி நீ காலி என்கிறார்கள். எந்திர லோகத்து பாடலில், என் உயிரே உயிரே ராஜாளியே, எனை நீ பிரியாதே என்கிறார்கள்.
ராஜாளி நல்லவரா, கெட்டவரா... அவர் யார் எனத் தெரியவில்லை. இந்தப் பாடலில் அடுத்து நரகத்துக்கு நீ விருந்தாளி என்று வேறு ராஜாளியைச் சொல்கிறார்கள். அடுத்து பாடலில் சொல்லப்படும் அளவீடு வார்த்தைகளான பொடி மாசு, குட்ட, ஆறே அங்குலம், ரன்கூஸ்கி (எந்திரன் கொசு) களைப் பார்க்கும் போது இந்தப் பாடலில் பல குள்ளமான ரோபோக்கள் சேர்ந்து பாடுவார்கள் போலத் தெரிகிறது.
எந்திர லோகத்து, ராஜாளி ஆகிய இரண்டு பாடல்களிலும் கற்பனையின் உச்சம் வார்த்தைகளில் வந்து விழுந்திருக்கிறது. இசையாகப் பார்க்கும் போது இரண்டு பாடலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் பாடல்களைக் கொண்டாடுவார்கள்.
ஷங்கர் படம் என்றாலே பாடல்களை ஒலி வடிவில் கேட்பதை விட ஒளியாக, பேரொளியாக அதைத் திரையில் பார்க்கும் போது நம் கற்பனைக்கும் எட்டாத காட்சியாக விரியும் என்பது நிஜம். அது இந்த இரண்டு பாடலையும் ஷங்கர் எப்படி படமாக்கியிருப்பார் என்று நம்மை இப்போதே கற்பனை செய்ய வைக்கிறது.