Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சந்தானத்துடன் போட்டிபோட வேண்டிய அவசியம் இல்லை! - சிவகார்த்திகேயன்

17 செப், 2015 - 18:18 IST
எழுத்தின் அளவு:
I-will-not-competitive-with-Santhanam-says-Sivakarthikeyan

எதார்த்தமான நடிகர், இன்றைக்கு இவர் கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்கள், பணப்பையோடு காத்திருக்கின்றனர். சினிமா பின்னணி இல்லாமல், தன் திறமையால் முன்னுக்கு வந்த, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம், ரஜினிமுருகன் - சிவகார்த்திகேயனுடன் ஒரு சந்திப்பு...


* சின்னத்திரையில் வந்து, மக்களுக்கு பெரிய நம்பிக்கையை நீங்க கொடுத்து இருக்கீங்க, உங்களைக் கொண்டாடும் மக்களுக்கு பதிலுக்கு நன்றிகடனா என்ன செய்யப் போறீங்க?


வளர்ந்து வரும் இந்த நேரத்தில், என்னால் பெரிய அளவு உதவிகளோ, மற்ற விஷயங்களோ செய்யமுடியாது. அதனால் என்னை நம்பி இரண்டரை மணி நேரம் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு, நான் செய்ய நினைப்பது, நல்ல கதையும், நல்ல படங்களா அவங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். இதைத் தாண்டி வேறு எதுவும் என்னால் யோசிக்க முடியல.


* கலையை வியாபாரம் ஆக்க கூடாதுனு பேசிட்டு இருக்காங்க, நடிகர்கள் 2, 3 படங்கள் ஹிட் கொடுத்த பிறகு அவங்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை கோடிகளில் கொட்டி கொடுக்கிறாங்க, படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்கு, உங்கள் படம் ரஜினி முருகன் வியாபாரம் கூட, இது பற்றி உங்கள் கருத்து?


சினிமா என்பது ஒரு கலைதான். காமிரா முன்னாடி நிற்கும் வரை கலையா தான் பார்க்கிறோம், ஆனால் சூட்டிங் முடிந்து ரிலீஸ் நேரம் அது வியாபாரம் ஆகிறது. பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் அந்த பணத்தை எப்படி எடுப்பார், அதில் ஒரு பிசினஸ் இருக்கு. என்னோட பார்வையில், யார் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான். நான் உழைப்பை முதலீடு செய்கிறேன். தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்கிறார். இறுதியில் படம் வியாபாரம் ஆகிறது. ரஜினி முருகன் நல்ல தொகைக்கு வியாபாரம் ஆனதாக கேள்விபட்டேன். சந்தோஷம் தானே.


* ரஜினி முருகன் படம் பெரிய தொகையில் வியாபாரம் ஆனது, உங்களுக்கு பயம் பதட்டம் இருக்கா, இல்லை இயல்பா இருக்கீங்களா?


கண்டிப்பா பயம், கூடுதல் பதட்டம் இருக்கு, கடைசியா பண்ண 4 படங்களும் பெரிய அளவில் வியாபாரம் ஆகியிருக்கு. ரஜினி முருகன் படம் மிகப்பெரிய வியாபாரம் ஆகியிருக்கு. இது ஒரு டீம் வெற்றி, இசையமைப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இப்படி எல்லாரும் சேர்ந்து கொடுக்கும் உழைப்பு. அவர்களோடு நானும் சேர்ந்து இருக்கேன்.


* காமெடி ஈஸியா, மிமிக்ரி செய்வது ஈஸியா?


காமெடியன் ஒரு பிரிவுதான் மிமிக்ரி செய்வது. காமெடிக்கு கூட இருந்து சப்போர்ட் பண்ணலாம். மிமிக்ரிக்கு அப்படி பண்ண முடியாது, காமெடி இயல்பா வரணும், மிமிக்ரி அவர்களைப் போல நாம செய்யணும். அந்த ஒரிஜினாலிட்டி இருக்கணும் அப்போதுதான் ரசிப்பார்கள். இரண்டுமே கொஞ்சம் கஷ்டம் தான்.


* நீங்கள் வந்த இடமான மிமிக்ரி கலைஞர்களுக்கு ஏதும் நல்லது செய்வீர்களா? இல்லை செய்துட்டு வர்றீங்களா?


பணம் மட்டுமே அவர்களுக்கு பெரிய உதவியா இருக்கமுடியாது. கேரளாவில் மிமிக்ரி கலைஞர்கள் பலர் நடிகர்களா வந்து சாதிச்சிருக்காங்க. தமிழ்ல இது கொஞ்சம் கஷ்டம் தான். இப்போதைக்கு நான் செய்ய வேண்டியது, முடிந்த அளவு என் படங்களில், திறமையானர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டியது, என்னோட படங்களில் சிலரை பயன்படுத்தியும் இருக்கேன்.


* ஹீரோக்களின் வெற்றியை தீர்மானிப்பது ரசிகர்களா? இல்லை கதை அமைக்கு இயக்குநர்களா?


2 பேருமே முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். ரசிகர்களின் பார்வையில் அந்த படத்தை கொண்டாடக்கூடிய வகையில் கதை அமைக்கும் இயக்குநர்களுக்கு பெரும் பொறுப்பும், பங்கும் இருக்கிறது.


* சினிமாவிற்கு யார் வேணும்னாலும் வரலாம் என்பதற்கு நீங்கள் மிகச்சிறந்த உதாரணம். நீங்க சொல்லுங்க, சினிமாவில் நேரம் முக்கியமான ஒன்றா, இல்ல லக் இருக்கணுமா, இல்லை திறமை மட்டும் போதுமா?


சினிமாவில், என் அனுபவத்தில் சொல்கிறேன் திறமை ரொம்ப முக்கியம். லக் ஒரு சிலர்க்கு இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடிக்க முடியாது. ஒருத்தருக்குள் இருக்கும் திறமையை மட்டும்தான் கண்டுபிடித்து வாய்ப்பு தருவாங்க. நம்முடைய திட்டமிடுதல் சரியா இருந்தாலே, நேரம் சரியா இருக்கும் என்பது என் கருத்து.


* இமானும் உங்க படத்துக்கு இசையமைக்கிறார், அனிருத் உங்க படத்துக்கு இசையமைக்கிறார் எப்படி சாத்தியமாகிறது?


இரண்டு பேருடனும் எனக்கு சரியான புரிதல் இருக்கு. என் படங்களை, இசையை 2 பேர் கிட்டயும் கலந்து பேசுவேன். ஒரே வரியில் சொல்லணும்னா இமான் என்னுடைய அண்ணன், அனிருத் என்னுடைய உண்மையான நண்பன்.


* உங்க படங்களில் சூரியை மட்டும் அதிகமா கூட வைத்துக் கொள்வது ஏன்?


அப்படி இல்லை, சதீஷ் கூடவும் நடிக்கிறேன். சதீஷ் நானும் மெரினாவில் நடிக்க தொடங்கினோம். எதிர்நீச்சல், மான்கராத்தே இப்படி வந்திருக்கார். சூரி அண்ணன், மனம் கொத்தி பறவை, கேடிபில்லா, வருத்தபடாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் இப்படி நடிச்சிருக்கேன். நாங்க எல்லாருமே சினிமாவில் நம்மால் ஏதும் பண்ணமுடியும் என்ற நட்போடு பழகினவர்கள். அதனால் எங்களுக்குள் ஒரு நட்பும், அன்பும் இருக்கு.


* குறிப்பிட்ட கம்பெனிகிட்ட தான் உங்க கால்ஷீட் கொடுத்திருக்கிங்களாமே உண்மையா?


உண்மை இல்லை, என் கால்ஷீட் நான்தான் பார்க்கிறேன். எனக்கு மானேஜர் கூட இல்லை. இப்படி ஒரு பேச்சு ஏன் வருகிறது என்றால், நான் படம் பண்ண தயாரிப்பாளர்களுக்கு, திரும்ப திரும்ப படம் பண்ணுவதால் தான்.


* யார்கூட சேர்ந்து நடிக்க ஆசைப்படுறீங்க?


கவுண்டமணி, சத்யராஜ் இவங்க கூட்டணியில் நான் ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறேன்.


* நடிகர்கள் எதை செய்தாலும், சொன்னாலும் ரசிகர்கள் அவர்களை தலைவனா கடவுளா கற்பனையில் வந்தபடி கொண்டாடுகிறார்கள். உங்க படங்களில் அப்படியான ரசிகர்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல விரும்புவீர்களா?


முதலில் என் படம் எல்லாருக்குமான படமா இருக்கணும்னு நினைப்பேன். எதிர்நீச்சல் படம் அப்படி ஒரு மெசேஜ் இருக்கும் படமா அமைந்தது. அதற்குப் பிறகு என் படங்களில் அப்படி ஒரு கதை அமையவில்லை. என் படங்களை அதிகம் குழந்தைகள் பார்ப்பதாக சொல்கிறாங்க, அதனால் முடிந்த வரைக்கும் இனிவரும் படங்களில் சின்ன ஒரு மெசேஜ் சொல்ல முடிற்சிக்கிறேன்.


* சமீப கால தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர்களில் உங்க வளர்ச்சி அபாரமா இருக்கே? காரணம்?


நான் இன்னும் வளரலனு சொன்னா அது பொய். ஒவ்வொரு வருஷமும் ஒரு படி முன்னேறி தான் போயிட்டு இருக்கேன், அதற்கு முதல் காரணம் மக்கள் எனனை ஏற்றுக் கொண்டது. இரண்டாவது, இதுவரை என் படங்கள் பெரிய தவறை செய்யவில்லை. ரொம்ப முக்கியமான விஷயம் இங்கே சொல்லணும். நான் வளர்ந்திட்டேனு என் தலையில் ஏற்றிக் கொண்டால் அது பெரிய சிக்கல், அங்கவே சுருங்கி போய்டுவேனு நினைக்கிறேன்.


* எந்த மாதிரி படங்கள் பண்ண ஆசை?


நான் இன்னும் வித்யாச, வித்யாசமான கதைகள் பண்ணல, எனக்கு ஏற்றமாதிரி கதைகள் தான் பண்ணிருக்கேன், இனி தான் அந்த முயற்சி எடுக்கணும். நல்ல ஆக்ஷன் படம், அப்படியே மனசை தொடுவது போல காதல் கதைகள் பண்ணனும். இப்படி பல ஆசைகள் இருக்கு.


* ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் - யார் பழகுறதில், பக்கத்தில் வந்து நிற்பாங்க?


ஒரு பொண்னை சொன்னால், இன்னொரு பொண் கோபப்படும், அதனால் இந்த கேள்வியை விட்டுடலாம், எந்த பொண்ணு எங்கூட நடிச்சாலும் அந்த செட்டே கலகலப்பா இருக்கும், ஓகே வா


* நீங்க நடிக்க ஆசைப்படும் இயக்குநர் பட்டியல் சொல்லுங்க?


பெரிய லிஸ்ட் இருக்கு. ஷங்கர் சார், முருகதாஸ் சார், இவங்க படங்களில் நடிக்க பெரிய திட்டம் இருக்கும். இன்னும் இதற்கான நேரம் வரல.


* ஒவ்வொரு படத்துக்கும் ரொம்ப டைம் எடுத்துக் கொள்வது ஏன்?


ஒரு வேலை மட்டும் தான் என்னால் கவனம் எடுத்து செய்ய முடியும். ஒரு படத்தை கமிட் பண்ணால் அந்த டீம்கூட தான் இருப்பேன். டிஸ்கஸ் பண்ணுவேன். கதைகேட்டு நேரா சூட்டிங் போனது மெரினா ஒரு படம் மட்டும் தான். 30 நாள் சூட்டிங் போனால் 10 நாள் பிரேக் எடுத்து வீட்டில் இருப்பேன். எனக்கு வருஷத்துக்கு 3 படங்கள்தான் பண்ணமுடியும்னு நினைக்கிறேன். என்மேல் இருக்கும் இன்வெஸ்மென்ட் அதிகமாயிட்டு, கொஞ்சம் பொறுப்பா படங்கள் பண்ணனும், என்னால் யாருக்கும் இழப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்.


* தனுஷ் கூட திரும்ப நடிக்க வாய்ப்பு இருக்கா?


ஒரு வருஷம் முன்னாடி சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசினோம். அதன்பிறகு தனுஷ் சார் இப்ப வேணாம், நல்ல கதையா அமையும்போது சேர்ந்து பண்ணலாம்னு சொல்லியிருக்கார். கண்டிப்பா நாங்க சேர்ந்து படம் பண்ணுவோம்.


* ரஜினி முருகன் படத்தில் உங்க ரோல் என்ன? ரஜினி ரசிகரா வர்றீங்களா?


இப்பவே கதை சொல்லிட்டா, தியேட்டர் வந்து படம் பார்க்க வேண்டாமா? ஏன் இந்த டைட்டில்னு படத்தில் ஒரு குட்டி கதையே இருக்கு, என் முந்தைய படங்களின் சாயல் இருக்கும், கதைகளம்னு பார்த்தால் ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கும் பிரச்னை எல்லாம் இருக்கு. இதுவரை இவ்ளோ பெரிய குடும்ப படம் நான் பண்ணல. இரண்டு ரோல் இல்லை. ஒரே ரோல் தான்.


* உங்களை வைத்து படம் தயாரிக்க விருப்பம் இல்லாமல் தான் விஜய்சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரித்தார் என்ற செய்தி?


முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தனுஷ் சார் எனக்கு எதிராக எல்லாம் படம் பண்ண மாட்டார்னு நினைக்கிறேன். அவர் நண்பர் விக்னேஷ் சிவன், அவர் கதைக்கு யார் வேணும்னு இயக்குநர் முடிவு செய்துதான் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தார். இதுதான் நடந்தது.


* உங்களுக்கும் சந்தானத்துக்கும் மறைமுக போட்டியாமே?


அது எப்படி இருக்க முடியும். அவர் வேற டிராவல், அவர் கூட போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் அவர்கிட்ட எதிர்பார்ப்பதும், என்னிடம் எதிர்பார்ப்பதும் வேறவேறயா இருக்கு.


* ஒரு தொலைக்காட்சி, இன்று ஒரு பெரிய ஹீரோவை மக்களுக்கு தேர்ந்தெடுத்த கொடுத்திருக்கு, இந்த அனுபவம்?


என்னை, ஒவ்வொரு வீடாக, மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்தது விஜய் டிவி தான். அது இது எது ஷோ மட்டும் 160 எபிசோட், கிட்டத்தட்ட 3 வருஷம் மேல செய்தேன். கலக்கப்போவது யார், ஜோடி நம்பர் 1 இப்படி என் நிகழ்ச்சிகள் தனி அடையாளத்தை கொடுத்தது, மறக்கமுடியாத அனுபவத்தை தந்திருக்கு.


* உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?


முன்னாடி எல்லா மண்டைய போட்டு உடைச்சுக்குவேன். ஏன் இப்படி எழுதறாங்க. யார் எழுதுறாங்கனு யோசிப்பேன். ஆனால் இப்ப எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் பயப்படுவது என்னை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு தான்.


* உங்களுடைய அடுத்த ப்ராஜக்ட்?


என் நண்பர் ஆர்.டி. ராஜா மற்றும் ப்ரண்ட்ஸ் தயாரிக்கிறாங்க. என் கல்லூரி ப்ரண்ட்ஸ் 2 பேர் அவரோட இருக்காங்க. எல்லாரும் சேர்ந்து தான் படம் பண்றோம். பாக்யராஜ் கண்ணன் இயக்குநர், அவர் சுந்தர் சி, அட்லி கிட்ட வேலை பார்த்தவர், Dft மாணவர், அவர்தான் இயக்கப்போகிறார். இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை. அடுத்த மாதம் தான் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in