மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஞ்சாதே, கோ படங்களில் ஆவேசமான இளைஞனாக நடித்து, தமிழ் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளியவர், அஜ்மல். இடையில் ஏற்பட்ட சறுக்கல்களால், மலையாளம், தெலுங்கிற்கு சென்ற அவர், மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு.
கோ படம் பெரிய வெற்றி பெற்றது; அந்த படத்திற்கு பின், சரியான கதை அமையவில்லை போலிருக்கிறதே?
உண்மை தான். நீங்கள் இதை கேட்கும்போது, தர்ம சங்கடமாக உள்ளது. ஓவென அழ வேண்டும் போலிருக்கிறது. பெரிய ஹிட் கொடுத்துட்டு, எங்கேடா இருக்கே என, எல்லாரும் கேட்கின்றனர். கோவுக்கு பின், கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களின், ரிலீஸ் பிரச்னை இருந்தது. இதனால், அந்த படங்கள் சரியாக போகவில்லை. மலையாளம், தெலுங்கிற்கு போய், ஓரளவு சாதித்தேன்; ஆனால், எனக்கு தமிழில் சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளது; கண்டிப்பாக சாதிப்பேன்.
இடைவெளிக்கு பின், மெல்ல திறந்தது மனசு படம் மூலம் திரும்ப வந்திருக்கீங்க; அந்த படம் பற்றி...
தெலுங்கில், சிரஞ்சீவி போன்ற பெரிய நடிகர்களுக்கு, சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வம்சி. அவரின் இயக்கத்தில், இந்த படத்தில் நடிச்சிருக்கேன். சின்ன வயதில், எனக்கு
மனைவியாக வரபோவது, இவள்தான் என்று, பெரியோர் சொல்லி விடுகின்றனர். நான், பெரியவனாகி, அந்த பெண் எங்கு இருக்கிறார் என்று, ஊர் ஊராக தேடுவேன். இது தான், அந்த படத்தின் கதை.
சில தமிழ் படங்களை தவறவிட்டது உண்மையா?
ஆமாம்; பீட்சா படம் எனக்கு வந்தது. அந்த நேரத்தில், நான் அதிகம் சம்பளம் கேட்பதாகவும், தமிழில் நடிக்க மாட்டேன் என்றும், என்னைப் பற்றி சில வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால், அந்த பட வாய்ப்பு மட்டுமல்ல; பல படங்களின் வாய்ப்புகள் பறிபோய்விட்டன.
வில்லனாக நடிக்க மாட்டீங்களா?
கோ படத்துக்கு பின், கேரக்டர் ரோல், வில்லன் ரோலில் நடிப்பதற்காக, அதிக அழைப்புகள் வந்தன. கோ படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த். அவர் மீது இருந்த மரியாதை காரணமாகவும், ஹீரோவுக்கு இணையான கேரக்டர் என்பதாலும், அந்த படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித் தேன். இதற்கு பின், வில்லனாக நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
வேறு என்ன பாலிசி வைத்துள்ளீர்கள்?
சினிமாவில், எனக்கு காட்பாதர் யாரும் இல்லை; என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும், சினிமா துறையில் இல்லை. மீடியாவும், ரசிகர்களும் தான், எனக்கு பெரிய ஆதரவு. இனி வில்லனாக
மட்டுமல்ல; இரண்டு ஹீரோ படங்களில் கூட, நான் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை
பின்பற்றப் போகிறேன்.
டாக்டரான நாம், ஆக்டர் ஆகிட்டோமே என யோசித்தது உண்டா?
இல்லை; நடிக்க முடிவு செய்து தான், டாக்டர் தொழிலை விட்டு, சினிமாவுக்கு வந்தேன். தமிழில் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான், என்னுடைய லட்சியம். கடைசியாக நடித்த, இரு படங்கள் படுதோல்வி. இதற்கு மேல், தோல்வியை கொடுக்கக் கூடாது. இனி, தோல்விக்கு தோல்வியை பரிசளிக்க விரும்புகிறேன். சின்ன வயதில் இருந்தே, தமிழில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வருகிறேன். இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எனக்குள் அதிக மாற்றங்கள் நடந்துள்ளன. இப்போது உற்சாகமாக இருக்கிறேன்.
எந்த மொழி படங்களில் உங்களுக்கு போட்டி அதிகமா இருக்கு?
தமிழில் தான், எனக்கு சிக்கல்.எனக்கு தமிழில் சரியாக பேச வராது; ஆனால், நிறைய தமிழ் படங்கள் பார்த்து, இப்போது ஓரளவு பேசுகிறேன். தமிழில் தான், எனக்கு போட்டி அதிகமாக
இருப்பதாக நினைக்கிறேன்.
பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள் போலிருக்கிறதே?
அப்படி எல்லாம் எதுவுமில்லை. கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களின் ரிலீஸ் நேரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், எனக்கு வர வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தேன். ஆனால், இவ்வளவு விட்டுக் கொடுத்தும், நான் நிறைய சம்பளம் கேட்பதாக வதந்தி பரவிய விஷயம் தான், கஷ்டமா இருக்கு. நான் நாளைக்கே பெரிய ஹீரோவாகி, பாக்கெட்டில் பணம் வாங்கி போட்டுக்க விரும்பல. கஷ்டப்பட்டே வர்றேன்; நோ பிராப்ளம்!