மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிறந்த குழந்தைகள் படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற 'காக்கா முட்டை' படத்தின் இயக்குநர் மணிகண்டன் 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த நேர்காணல்.
* உங்களை பற்றி...?
என் சொந்த ஊர் உசிலம்பட்டி. 'மெக்கானிக்கல் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்' படித்தேன். பின் சென்னைக்கு வந்து வேலை பார்க்கும் போது போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கல்யாண விசேஷங்களுக்கு போட்டோகிராபராக வேலை பார்த்தேன். பின் 2009ல், இயக்குநர் ராஜிவ்மேனன் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்து 'விண்ட்' என்ற குறும்படத்தை இயக்கினேன். 3 ஆண்டு போராட்டத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் 'காக்கா முட்டை' படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
* காக்கா முட்டை என்ன கதை...?
குடிசை பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலையில், பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். மீதி கதையை நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
* யாரெல்லாம் நடிச்சிருக்காங்க...?
சென்னை காசிமேடு மீனவர் குப்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இவர்களை தேர்வு செய்து 6 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தேன். இவர்களின் அசத்தலான நடிப்பிற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. இவர்கள் தவிர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, நிவாஸ், பாபுஆண்டனி மற்றும் சிம்பு 'கெஸ்ட் ரோலில்' நடிச்சிருக்கார்.
* தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தீர்களா ?
'பசங்களுக்கு கண்டிப்பா விருது கிடைக்கும்' என்று நடிகர் தனுஷ் படத்தின் 'பர்ஸ்ட் கட்' பார்த்தவுடன் சொல்லிவிட்டார். விருது கிடைக்க வேண்டும் என்று விரும்பி, நம்பிக்கையை சிதறவிடாமல் படம் பண்ணினோம். நாங்கள் விரும்பிய விருது எங்களை தேடி வந்து மகிழ்ச்சியை தந்துவிட்டது.
* என்ன கருத்து சொல்லியிருக்கீங்க...?
அப்படி எதுவும் இல்லை. இந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு நல்ல வாழ்க்கையை பார்த்த உணர்வு ஏற்படும். மனதிற்கு ஆறுதலான எளிமையான படமாக அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.