Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மூன்றே படங்கள் : மூவாயிரம் கோடி வசூல்

30 ஏப், 2022 - 10:30 IST
எழுத்தின் அளவு:
3-Movies-:-Rs.3000-crore-collection

கொரோனா அலைகளுக்குப் பிறகு பல தொழிலும் முடங்கியது. குறிப்பாக சினிமா துறை நிறையவே சோதனைகளை எதிர்கொண்டது. பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பல நாட்களில் 50 சதவீத இருக்கை அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது.

தியேட்டர்களை நிரந்தரமாக மூடி விடலாமா என தியேட்டர்காரர்களும் யோசித்து வந்தார்கள். ஆனாலும், சில பிரம்மாண்ட படங்கள் வெளிவந்து அவர்களைக் காப்பாற்றியது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்குமே சேர்த்து டப்பிங் படங்கள் தான் காப்பாற்றியது என்று சொன்னால் அது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

2021ன் டிசம்பர் மாதக் கடைசியில் வெளிவந்த 'புஷ்பா', கடந்த மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்', இந்த மாதம் வெளிவந்த 'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் மொத்தமாக மூவாயிரம் கோடி வசூலைப் பெற்று மிரள வைத்திருக்கின்றன.

'புஷ்பா' படம் தியேட்டர் வசூலாக 360 கோடியையும், 'ஆர்ஆர்ஆர்' படம் தியேட்டர் வசூலாக 1100 கோடியையும், 'கேஜிஎப் 2' படம் 1000 கோடியையும் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' இரண்டு படங்களும் தெலுங்கில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டன. 'கேஜிஎப் 2' படம் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. இப்படி பிராந்திய மொழி திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்தித் திரையுலகினருக்கு கடும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளன.

தியேட்டர்களில் இருந்து வசூலாக மூன்று படங்களும் பெற்ற தொகை 2460 கோடி. ஐந்து மொழிகளுக்கான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, இதர உரிமைகள் ஆகியவை மூன்று படங்களுக்குமாக சேர்த்து 500 கோடியைக் கடந்தது. ஒட்டு மொத்தமாக 3000 கோடி அளவிற்கு இந்தப் படங்கள் வருவாயைப் பெற்றுள்ளது.

'புஷ்பா' படம் 200 கோடி ரூபாய் செலவில் தயாராகி தியேட்டர் உரிமையாக 150 கோடிகளுக்கு விற்பனையாகி 360 கோடியை வசூலித்தது. 'ஆர்ஆர்ஆர்' படம் 500 கோடி செலவில் தயாராகி 520 கோடிக்கு விற்பனையாகி 1100 கோடியை வசூலித்தது. 'கேஜிஎப் 2' படம் 100 கோடி செலவில் தயாராகி 350 கோடிக்கு விற்பனையாகி 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இந்த தென்னிந்தியப் படங்களின் வெற்றி இந்திய அளவில் மொழி எல்லைகளை மாற்றி அமைத்துள்ளது. எந்த மொழியில் படங்கள் தயாரானலும் பரவாயில்லை அதைத் தங்களது தாய்மொழியில் பார்த்து ரசிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்துள்ளது.

இந்தப் படங்களின் வெற்றி பாலிவுட்டில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து செல்லும் படங்கள் ஒரிஜனல் ஹிந்திப் படங்களைக் காட்டிலும் வசூலில் சாதனை புரிவது பாலிவுட்டினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்களும் சில பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படங்கள் சில கோடி வசூலைக் கூடப் பெற முடியாமல் தள்ளாடின.

இந்திய சினிமா என்றால் இதுவரையில் ஹிந்தி சினிமா மட்டும்தான் என்று உலக அளவில் பார்க்கப்பட்டது. அந்த பிம்பத்தை 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் சுக்குநூறாக உடைத்துவிட்டன. இந்தப் படங்களையும் இந்தியப் படங்கள் எனக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஹிந்தியிலிருந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க வந்தால் அது ஏதோ குறைவான ஒரு விஷயமாகப் பார்த்து வந்தார்கள் ஹிந்தி நடிகர்கள், நடிகைகள். ஆனால், இப்போது அனைத்துமே மாறிவிட்டன. ஹிந்திப் படங்களில் நடித்து கிடைக்காத பேரும், புகழும் தென்னிந்தியப் படங்களின் மூலமும் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

தெலுங்கு சினிமாவும், கன்னட சினிமாவும் 1000 கோடி வசூலை சாதித்துவிட்டன. ஆனால், தமிழ் சினிமா இன்னும் 1000 கோடிக்கான ஒரு படத்தை உருவாக்கவில்லை என்பது சோகமே. தாங்கள் மட்டும் 100 கோடி சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் சில ஹீரோக்கள் தமிழ் சினிமாவும் 1000 கோடி வசூலைப் பெற கொஞ்சம் பொறுப்போடு செயல்படுவார்களா என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.1000 கோடி வசூலித்த இந்தியப் படங்கள் எவையெவை?ரூ.1000 கோடி வசூலித்த இந்தியப் படங்கள் ... தமிழ் தொழிலாளர்களுக்கு தமிழ் நடிகர்கள் ஆதரவு தருவார்களா? தமிழ் தொழிலாளர்களுக்கு தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
04 மே, 2022 - 18:43 Report Abuse
தாமரை மலர்கிறது இனியும் வெறும் கான்களை வைத்து கொண்டு, டிவி சீரியலை எடுத்து திரைப்படம் என்று சொல்லி வடஇந்தியர்களை பாலிவுட் ஏமாற்ற முடியாது.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
01 மே, 2022 - 10:40 Report Abuse
M.Sam தமிழ் சினிமாவால் முடியும் ஆனாலும் சிறந்த கதை கட்சி அமபைப்பு வசனம் சிறந்த தொழில் நுட்ப்பம் என்று கொண்டுவந்தாலும் இங்கே எஞ்சி நிற்பது பேர்சொனிபிகேஷன் அதாவது தானே நபர் துதி படுத்தல் என்ற ஏழுத படைத்து வித்தில் அனைத்தும் தொறுபோகிறது அதற்க்காக மற்ற மாநிலத்தில் இல்லை என்று அர்த்தம் இல்லை அங்கேயும் உண்டு இருந்தாலும் ஆடின்ஸ் அளவு என்று பார்த்தால் ஹிந்தி முதலிடம் தெலுகு இரண்டாம் இடம் தமிழ் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது .மேற் சோனா அணைத்து அம்சம்கள் எல்லாம் மலையாள சினிமாவில் உண்டு இருந்தால் அவர்களின் ஆடின்ஸ் எண்ணிக்கை குறைவு அதனால் வசூல் கம்மி தமிழில் எஸ் எஸ் வாசன் அந்தக்காலத்தில் சொத்தையா இவர்கள் செய்து விட்டார்கள் அன்றய தொழில் நுட்பம் அதை வைத்து கொண்டு பிரம்மாண்டத்தி கொடுத்தும் தமிழ் சினிமாதான் சீந்திரலேகா திரை படம் ஒரு உதாரணம்
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
30 ஏப், 2022 - 14:22 Report Abuse
shakti தமிழ் சினிமா ??? 1000 கோடி ??? காமெடி பண்ணாதீங்க பாஸ் .. இவனுங்க "நசுக்கிட்டான் , கசக்கிட்டான் , பிதுக்கிட்டான் " என்று தாழ்வான்ஸ் படம் எடுப்பதை எப்போது நிறுத்திடுவாங்களோ அப்போதான் அது சாத்தியம் ஆகும் .. அதுக்கு வாய்ப்பில்லை ராசா
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
30 ஏப், 2022 - 12:29 Report Abuse
S Bala அதனால் இனிமேல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு படப்பிடிப்புக் கூடங்கள் துவங்கலாம். பள்ளிகளை மூடிவிட்டு தியேட்டர்கள் திறக்கலாம். நாடு உருப்படும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in