ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
உலக அளவில் இந்தியத் திரைப்படங்கள் ரூ.500 கோடி வசூல் என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. ஆனால், அதையும் தாண்டி 1000 கோடி வசூலித்து சாதனை புரிவதுதான் இப்போது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
உலக அளவில் இதற்கு முன்பு மூன்று இந்திய திரைப்படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளன. 2016ல் வெளிவந்த 'டங்கல்' திரைப்படம் முதன் முதலில் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலைக் கடந்தது. சீனாவிலும் பெற்ற வசூலால் இப்படம் ரூ.2000 கோடி வசூலைக் கடந்து இந்தியப் படங்களின் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.
அதற்கடுத்து 2017ல் வெளிவந்த ராஜமவுலியின் ‛பாகுபலி 2' படம் உலக அளவில் ரூ.1810 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தற்போதும் ஓடிக் கொண்டிருக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் ரூ.1100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கடுத்து ‛கேஜிஎப் 2' படமும் ரூ.900 கோடி வசூலைக் கடந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் அந்த சாதனையைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இவற்றில் குறைவான நாட்களில் ரூ.1000 கோடி சாதனையைப் பெறும் படம் என்ற சாதனையை ‛கேஜிஎப் 2' படைக்க வாய்ப்புள்ளது.
தெலுங்கு, கன்னடப் படங்கள் கூட ரூ.1000 கோடி சாதனையைப் படைத்துவிட்டன. ஆனால், தமிழ்ப் படங்கள் 200 கோடி வசூலிப்பதைத்தான் இப்போது பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.