மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஜோதிகாவுடன், காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள விதார்த், வண்டி, சித்திரம் பேசுதடி - 2, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
சமீபத்திய உங்கள் மகிழ்ச்சி?
சினிமாவை வெற்றிபெற வைக்கும் சக்தி பெற்றவர்கள், பத்திரிகையாளர்கள். பத்திரிகைகள் பாராட்டி, பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல், நன்றாக ஓடிய படம், மேற்கு
தொடர்ச்சி மலை. இது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.
வண்டி படத்தை பற்றி கூறுங்கள்?
வண்டி படம் சின்ன பட்ஜெட்டில் தயாராவதாக கூறினர். கதையை கேட்ட போது எப்படி எடுப்பார்கள் என, சந்தேகம் வந்தது. இந்த படத்தில், நான்கு கேமராக்கள் ஒரே நேரத்தில் இயங்கின. அடுத்தவர் நடித்தால் மற்றவர் சும்மா இருக்க முடியாது. அவரது ரியாக் ஷன் இருக்க வேண்டும்.
கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நான் நடிக்கும் படத்திற்கான கதையை, நானே அமர்ந்து கேட்பேன். தினமும் இரண்டு கதைகள் கேட்பேன். கதையை கேட்டதும், என் தம்பி மற்றும் மனைவியுடன் கலந்து பேசி, படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன்.
காற்றின் மொழி படத்தில் நடித்த அனுபவம்?
காற்றின் மொழி படத்தை, திட்டமிட்டதற்கு முன்னதாகவே, 37 நாட்களில் எடுத்து முடித்தனர். என்னை நம்பி பெரிய ரோலை கொடுத்தனர். முதல் நாள் படப்பிடிப்பில், ஐந்து நிமிட சீனை, ஒரே ஷாட்டில் எடுத்தனர். ஆரம்பத்தில் அந்த காட்சியில் நடிக்கத் தயங்கினேன். ஆனால், என் நடிப்பை பார்த்து விட்டு, அனைவரும் பாராட்டினர்.
அடுத்த படம் குறித்து?
அடங்காதே இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை. அவர் என்னிடம் கதை சொல்ல, பல முறை முயற்சித்ததாக கூறினார். உண்மையிலேயே எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது அவர் தான், எனக்கு வாய்ப்பு தர வேண்டும். எல்லாத்தையும் முயற்சித்து விட வேண்டியது தான். விதார்த், இந்தமாதிரி படங்களில் தான் நடிப்பார் என்ற இமேஜ் எதற்கு?
அறம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியதாக இருந்ததாமே?
ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் கோபி நயினாரை என்னிடம் அறிமுகப்படுத்தினர். அவர், என்னை ஏற்கனவே தெரியும் என்றார். 'அறம் படம் விதார்த்துக்காக உருவாக்கியது தான். நயன்தாராவுக்காக சில மாற்றம் செய்தோம்' என்றார். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால், அறம் கதையில் நடிக்க முடியாமல் போனது.
உங்களது வெற்றிக்கு காரணம்?