'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் | 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை | ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி | மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்துள்ளனர். தற்போது இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக வீஜே தீபிகா பதிவிட்டுள்ளார். அதில், 'ஒருபொருள் நம்மகிட்ட இல்லாதபோதுதான் அதோட வலி என்னனு நமக்கு புரியும். இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு. அதோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.




