நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா கவுடா இனி செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் ரம்யாவும் தனது இண்ஸ்டாகிராமில் சன் டிவியில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.




