20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்துள்ளனர். தற்போது இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக வீஜே தீபிகா பதிவிட்டுள்ளார். அதில், 'ஒருபொருள் நம்மகிட்ட இல்லாதபோதுதான் அதோட வலி என்னனு நமக்கு புரியும். இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு. அதோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.