இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 100நாளை நெருங்கிய இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறினார். வெளியே வந்தபின் கதிர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலிலிருந்தது. இந்நிலையில், ஊடகங்களில் தற்போது பேட்டி தர ஆரம்பித்துள்ள கதிர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது பிக்பாஸ் டைட்டில் சர்ச்சை குறித்து பேசும்போது 'அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம்' என கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கதிர் முதன்முதலாக ஷிவின் குறித்து பேசியுள்ளார். இதை கதிர் மற்றும் ஷிவினின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.