எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சோஷியல் மீடியாக்களின் பெருவளர்ச்சி ஒருபுறம் பிரபலங்கள் எதை செய்தாலும் டிரெண்டாக்கி வருகிறது. இந்த செலிபிரேட்டிகளும் இதை வைத்துக்கொண்டு அநியாயத்திற்கு அல்சாட்டியம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சீரியல் வில்லி நடிகை சுப்புலெட்சுமி தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அழகிய தமிழ் மகள்', 'அன்பே வா' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன். அண்மையில் இவர் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், சுப்புலெட்சுமியின் கணவர் மேலாடை இன்றி சிக்ஸ்பேக் உடலைக் காட்டிக்கொண்டு நிற்க, சுப்புலெட்சுமி சிக்ஸ் பேக் வயிற்றின் மீது முத்தமிடுகிறார். மேலும் இருவரும் உதட்டு முத்தமும் கொடுப்பது மாதிரியான நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கணவன் மனைவி அந்தரங்க நெருக்கத்தை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டலாமா? என பலரும் சுப்புலெட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.