நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணம் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரல் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் வனிதாவின் பதிவும் ரவீந்தரை சீண்டி பழிவாங்கும் வகையில் இருப்பதாக பலரும் பேசி வந்தனர். காரணம், வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்த போது சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான விமர்சனங்கள் பரவலாக எழுந்தது. அப்போது ரவீந்தரும் தன் பங்கிற்கு வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.
தற்போது ரவீந்தர் திருமணமும் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், வனிதா 'கர்மா ஒரு பூமராங்' என பதிவிட்டு ரவீந்தருக்கு பதிலடி கொடுத்தார். அந்த டுவீட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்மையில் அது குறித்த விளக்கத்தை வனிதா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வனிதா அந்த பேட்டியில், 'உண்மையில் நான் மனதார ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அந்த டுவீட் நான் எதார்த்தமாக போட்டது. கர்மா யாரையும் சும்மாவிடாது என்பதை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன். அவர்களை மட்டும் குறிப்பிட்டு நான் போடவில்லை. என் வாழ்வில் அப்போது நான்கைந்து விஷயங்கள் நடந்தன. அதனால் அந்த பதிவை போட்டேன். ஆனால், அது அவர்களுக்கும் பொருந்தும். ரவீந்தரின் மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும். என்னிடம் வேண்டாம்' என கூறியுள்ளார்.