கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணம் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரல் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் வனிதாவின் பதிவும் ரவீந்தரை சீண்டி பழிவாங்கும் வகையில் இருப்பதாக பலரும் பேசி வந்தனர். காரணம், வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்த போது சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான விமர்சனங்கள் பரவலாக எழுந்தது. அப்போது ரவீந்தரும் தன் பங்கிற்கு வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.
தற்போது ரவீந்தர் திருமணமும் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், வனிதா 'கர்மா ஒரு பூமராங்' என பதிவிட்டு ரவீந்தருக்கு பதிலடி கொடுத்தார். அந்த டுவீட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்மையில் அது குறித்த விளக்கத்தை வனிதா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வனிதா அந்த பேட்டியில், 'உண்மையில் நான் மனதார ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அந்த டுவீட் நான் எதார்த்தமாக போட்டது. கர்மா யாரையும் சும்மாவிடாது என்பதை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன். அவர்களை மட்டும் குறிப்பிட்டு நான் போடவில்லை. என் வாழ்வில் அப்போது நான்கைந்து விஷயங்கள் நடந்தன. அதனால் அந்த பதிவை போட்டேன். ஆனால், அது அவர்களுக்கும் பொருந்தும். ரவீந்தரின் மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும். என்னிடம் வேண்டாம்' என கூறியுள்ளார்.