நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சோஷியல் மீடியாக்களின் பெருவளர்ச்சி ஒருபுறம் பிரபலங்கள் எதை செய்தாலும் டிரெண்டாக்கி வருகிறது. இந்த செலிபிரேட்டிகளும் இதை வைத்துக்கொண்டு அநியாயத்திற்கு அல்சாட்டியம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சீரியல் வில்லி நடிகை சுப்புலெட்சுமி தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அழகிய தமிழ் மகள்', 'அன்பே வா' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன். அண்மையில் இவர் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், சுப்புலெட்சுமியின் கணவர் மேலாடை இன்றி சிக்ஸ்பேக் உடலைக் காட்டிக்கொண்டு நிற்க, சுப்புலெட்சுமி சிக்ஸ் பேக் வயிற்றின் மீது முத்தமிடுகிறார். மேலும் இருவரும் உதட்டு முத்தமும் கொடுப்பது மாதிரியான நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கணவன் மனைவி அந்தரங்க நெருக்கத்தை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டலாமா? என பலரும் சுப்புலெட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.