நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பின்னர் ரச்சிதா மஹாலெட்சுமி கலர்ஸ் தமிழின் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். ஹிந்தி சீரியலின் ரீமேக்கான இந்த தொடரில் ரச்சிதாவுக்கு ஜோடியாக சீரியல் நடிகர் விஷ்ணு இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே இந்த தொடரானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வெறும் 140 எபிசோடுகளை மட்டுமே கடந்துள்ள இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிக்கட்டத்தை நோக்கி என்ற டேக் லைனுடன் புரோமோ ஒன்றும் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து 'சீரியலை முடிக்க வேண்டாம்' என கூறி வருகின்றனர். ஆனால், சீரியல் முடியப்போவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் இந்த புரோமோவானது அர்ஜூனின் திருமண எபிசோடு குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் யுக்தி என்றே சின்னத்திரை வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.