'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பின்னர் ரச்சிதா மஹாலெட்சுமி கலர்ஸ் தமிழின் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். ஹிந்தி சீரியலின் ரீமேக்கான இந்த தொடரில் ரச்சிதாவுக்கு ஜோடியாக சீரியல் நடிகர் விஷ்ணு இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே இந்த தொடரானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வெறும் 140 எபிசோடுகளை மட்டுமே கடந்துள்ள இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிக்கட்டத்தை நோக்கி என்ற டேக் லைனுடன் புரோமோ ஒன்றும் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து 'சீரியலை முடிக்க வேண்டாம்' என கூறி வருகின்றனர். ஆனால், சீரியல் முடியப்போவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் இந்த புரோமோவானது அர்ஜூனின் திருமண எபிசோடு குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் யுக்தி என்றே சின்னத்திரை வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.