தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இந்தியாவில் அறிமுகமான ஆன்லைன் சூதாட்ட செயலியால் ஏராளமானோர் ஏமாந்து, பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். இதனால் இதற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அதனை விளம்பரம் செய்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது "சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை" என்றார்.