தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் |
பாலிவுட் சினிமாவில் இருந்து மனீஷா கொய்ராலா, தீபிகா படுகோனே, வித்யாபாலன் என பல நடிகைகள் தமிழுக்கு வந்து நடித்துள்ள நிலையில், தற்போது காலாவைத் தொடர்ந்து வலிமையில் நடித்துள்ளார் ஹூமாகுரோசி. அவரைத் தொடர்ந்து தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சென்னை, ஐதராபாத், மும்பை என இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கங்கனாரணாவத்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறியுள்ள கங்கனா, தமிழில் இப்படம் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதோடு, அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களான ரஜினி, விஜய் ஆகியோருடனும் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.