கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தாலும் சமீபகாலமாக தமிழில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களை தொடர்ந்து தமிழில் அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் சிவராஜ் குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதேசமயம் கால்ஷீட்டை பொருத்து நான் நடிப்பது உறுதியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது அளித்த பேட்டியில், "சில தினங்களுக்கு முன்பு வினோத்தை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை. விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்".