ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
பாலா இயக்கி உள்ள வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பாலாவுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மன நெகிழ்வுடனும், கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து நேசித்து ஒரு நடிகனாக எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு, தங்களின் இயக்கத்தில் பணியாற்ற வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நான் படப்பிடிப்பின் போது கூட இக்கதையின் பாதிப்பை முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடையச் செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மக்கள் அனைவரும் இந்த படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு இயக்குனர் பாலாவுடன் தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அருண்விஜய்.